செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

Share

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த இது குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், மின்சக்தித் துறையுடன் தொடர்புடைய அனைத்துப் பங்காளிகளுடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் போது ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவர்களால் முன்வைக்கப்பட்ட நலன்புரி விவகாரங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, சாத்தியமான அனைத்து விடயங்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

மின்சாரத் துறையின் அபிவிருத்தி என்பது நாட்டின் தேசிய முன்னுரிமை மிக்க விடயமாகும்.

தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு இந்த மறுசீரமைப்பு இன்றியமையாதது என்பதால், இதற்கு ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என மின்சார சபை நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...