எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது. இந்தக் கொலை கலாசாரத்திற்கு இடமளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
வடகொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார், வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்டார். அவர் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அவை அனைத்தும் பொய்யாக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்தும் பாதுகாப்பு கோரினார், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இத்தகைய நிலையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் மக்கள் தினத்தை நடத்த முடியுமா?
ஜே.வி.பிக்கு (JVP) மக்கள் தினத்தை நடத்தத் தெரியாது என்றும், அவர்களுக்கு மக்கள் தினம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

