image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

Share

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘யதிவர மாபிய நிவஹன’ (Yativara Maapiya Nivahana) என்ற புதிய தேசிய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடுமையான பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் பிள்ளைகளைச் சாசனத்திற்கு வழங்கிய, சொந்தமாக வீடற்ற பெற்றோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “உங்களுக்கென ஓரிடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இது செயல்படுத்தப்படும். இதற்கென புத்தசாசன அமைச்சு மற்றும் வீடமைப்பு அமைச்சு இணைந்து சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்குப் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளிகளுக்கும் புதிய வீடொன்றை அமைப்பதற்காக 1.5 மில்லியன் ரூபாய் (15 இலட்சம்) நிதி உதவி வழங்கப்படும். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படும் இப்பணிகளில், பிரதேச மட்டத்திலான பங்களிப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வறிய நிலையில் உள்ள பௌத்த துறவிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...

image 1200x800 35 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்கள்: பிரான்ஸ் பிரபலங்கள் மீது பாயும் விசாரணை! – சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடி நியமனம்!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில், பிரான்ஸ் நாட்டின் அரசியல்...