tunel
செய்திகள்இலங்கை

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் புதிய சுரங்கப் பாலம்: 699 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி!

Share

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் (A-009) நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மஹையாவ புகையிரத வீதிக்குக் கீழே புதிய கொங்கிறீட் சுரங்கப் பாலம் (Concrete Box Underpass) ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A-009) மஹையாவ புகையிரத கடவைக்குக் கீழ் பகுதியில் இந்தச் சுரங்கப் பாலம் அமையவுள்ளது.

தேசிய போட்டி விலைமனு கோரல் அடிப்படையில், இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் M/s. NEM Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிர்மாணப் பணிகளுக்காக வரிகள் நீங்கலாக 699.58 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மஹையாவ பகுதி புகையிரத கடவை காரணமாகக் கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தச் சுரங்கப் பாலம் அமைக்கப்படுவதன் மூலம் புகையிரத சமிக்ஞை நேரங்களில் ஏற்படும் வாகன நெரிசல் முற்றாகத் தவிர்க்கப்படும்.

கண்டி – யாழ்ப்பாணம் வீதியூடான போக்குவரத்து நேரடித் தடையின்றி வேகமாகும், கரப் பகுதிகளில் எரிபொருள் வீணாவது குறைக்கப்படும்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...