லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்திற்குப் புதிய காலியான எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (23.12.2025) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, குறைந்த ஏலத்தை சமர்ப்பித்த சஹமிட் மெட்டல் ப்ரஷர் (Sahamitr Pressure Container PLC) நிறுவனத்திடம் இருந்து நான்கு வகையான சிலிண்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
அமைச்சரவை ஒப்புதலின் அடிப்படையில், 23 கிலோகிராமில் 20,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளன.
இதேவேளை, 5 கிலோகிராமில்185,000 சிலிண்டர்கள் , 25 கிலோகிராமில் 450,000 சிலிண்டர்கள் மற்றும் 37.5 கிலோகிராமில் 7,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில் நிலவும் எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், பழைய சிலிண்டர்களுக்குப் பதிலாகப் புதிய பாதுகாப்பான சிலிண்டர்களை விநியோகிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 662,000 புதிய சிலிண்டர்கள் லிட்ரோ நிறுவனத்தின் கையிருப்பில் விரைவில் இணையவுள்ளன.