34d96040 2a8a 11f0 b26b ab62c890638b.png
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் காற்றாலைத் திட்டங்கள்: மக்களின் விருப்பமின்றி மேலும் திட்டங்கள் இல்லை – அமைச்சரவை அங்கீகாரம்!

Share

மன்னார் தீவு மக்களின் விருப்பம் இல்லாமல், தொடர்ந்து அங்கு புதிய காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதேச மக்கள் முன்வைத்த சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ரீதியில் மீளாய்வு செய்யப்பட்ட வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிக காற்று ஆற்றல் வளம் கொண்ட பகுதியாக மன்னார் தீவில் மொத்தம் மூன்று காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன இது 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

Windscape Mannar (Pvt) Ltd: 20 மெகாவாட் திட்டம், எதிர்வரும் டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Hayleys Fenton: 50 மெகாவாட் திட்டம், 2026 டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னார் தீவு மக்களின் எதிர்ப்பின் காரணமாக இந்தக் கருத்திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை இடைநிறுத்தும் சூழல் நிலவியது. இந்தநிலையில், ஜனாதிபதியினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பின்வரும் அறிவித்தல் வழங்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் மன்னார் தீவு மக்களின் விருப்பத்துடன் மட்டுமே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இந்த மூன்று திட்டங்களுக்கு மேலதிகமாக வேறு காற்றாலைத் திட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

அவ்வாறு புதிய காற்றாலைத் திட்டங்கள் அமைப்பதாயின், அதற்குப் பொருத்தமான மாற்று இடம் தெரிவு செய்யப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...