பேருந்து மற்றும் ரயில் கட்டணங்கள் தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்பட்டு அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
எரிபொருள் விலையேற்றத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை நூற்றுக்கு 15 இல் இருந்து 20 வீதம் வரை அதிகரிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் சிரமப்படும் இவ்வேளையில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பது சிறந்ததல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews