26 6962660786ad0
செய்திகள்இலங்கை

திருகோணமலையில் துணிகரம்: விகாரையின் மலை உச்சியில் இருந்த புத்தர் சிலை மீண்டும் திருட்டு!

Share

திருகோணமலை – சேருநுவர காவல்பிரிவுக்குட்பட்ட சோமவதி வீதியில் அமைந்துள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில் கடந்த 6-ஆம் திகதி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று ஏற்கனவே திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த மற்றொரு சிலையே நேற்று (10) மீண்டும் திருடப்பட்டுள்ளது.

இன்று காலை சிலை திருடப்பட்டிருப்பதை அவதானித்த விகாரை தரப்பினர், இது குறித்து சேருநுவர காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறுகிய கால இடைவெளியில் ஒரே இடத்தில் இரண்டு தடவைகள் புத்தர் சிலைகள் திருடப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...