1500x900 2167079 tamil mp
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வேண்டும்: பிரித்தானிய எம்பி உமா குமரன் திட்டவட்டம்!

Share

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதில் தமது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் பிரித்தானியத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவரது உரையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படுபவர்களுக்கு எதிராகப் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் ஏற்கனவே தடைகளை விதித்துள்ளது. இந்த நீதி விசாரணை நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசு உறுதியாக உள்ளது.

நவீன பிரித்தானியாவின் வளர்ச்சியில் தமிழ் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பங்களிப்பு மகத்தானது. தமிழர்களின் திடமான நம்பிக்கையும் உறுதியுமே அவர்களின் இந்த வெற்றிக்குக் காரணம்.

“இலங்கையில் எனது பெற்றோர் இழந்த வாய்ப்புகளை, மீண்டும் ஒருமுறை பிரித்தானிய மண்ணில் கட்டியெழுப்ப அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பை நான் அருகிலிருந்து பார்த்துள்ளேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக உமா குமரன் தெரிவித்திருப்பது, சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...