பா.ஜ.க என்ற காற்றடைத்த பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“ராகுல் காந்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான தலைவர். மோடி புதிய விவசாய சட்டத்தை கொண்டு வந்தபோது, மதுரைக்கு வந்த ராகுல் காந்தி, இன்னும் 1 வருடத்தில் இந்த மோடி அரசாங்கம் விவசாய சட்டத்தை திரும்பப்பெறும் என்று கூறினார்.
அது போலவே நடந்தது. மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம், கலாசாரம் சீரழிந்துள்ளது. இதனை சரி செய்யும் ஆற்றல் ராகுல் காந்தியிடன் தான் உள்ளது.
தமிழகத்தில் தற்போது விடியல் ஏற்பட்டுள்ளது. தவறு நடக்கும் இடத்திற்கு முதல்வர் செல்கிறார், தவறானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, சொந்த கட்சிக்காரர்கள் தவறு செய்தால் கூட கண்டிக்கப்படுகிறார்கள்.
இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவின் மாடலாக தமிழகம் திகழ்கிறது. மேலும் பல சீர்திருத்தங்கள் தமிழகத்தில் வேண்டும். குறிப்பாக விவசாயம் , தொழில், கல்வி போன்ற துறைகளில் சீர்திருத்தம் தேவை.
ஜனவரி 7,8,9 ஆகிய திகதிகளில் ஏலகிரியில் தமிழக காங்கிரஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த முகாம் நடத்தப்படும்.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதற்கு மீண்டும் அடைப்பு என்பது தேவையில்லாத ஒன்று. முகக் கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
#WorldNews
Leave a comment