இந்தியாசெய்திகள்

இந்தியாவின் கோடீஸ்வர பெண்ணிற்கு தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக.., அவர் எடுத்த உடனடி முடிவு

Share
7 14
Share

இந்தியாவின் கோடீஸ்வர பெண்ணிற்கு தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக.., அவர் எடுத்த உடனடி முடிவு

நாட்டின் கோடீஸ்வர பெண் சாவித்ரி ஜிண்டால் என்பவருக்கு பாஜக வாய்ப்பளிக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். இவருடைய மகன் நவீன் ஜிண்டால் என்பவர் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பின்னர் பாஜக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தனது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி ஜிண்டால் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் வரும் ஓக்டோபர் 5 -ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஹிசார் தொகுதியில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட 67 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் பெயர் இல்லை. அதற்கு மாறாக அந்த தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருக்கும் கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாவித்ரி ஜிண்டாலின் ஆதரவாளர்கள் அவரை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினார். அதன்படி, தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிடுவாரா அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி சார்பில் போட்டியிடுவாராஎன்று தெரியவில்லை.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...