saF 1
செய்திகள்உலகம்

வாகன பயிற்றுவிப்பாளர்களிடம் இளம்பெண்கள் கவனமாக இருங்கள்!!

Share

கனடாவில் இளம்பெண் ஒருவரிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரான கனடா – மிசிசாகா நகரை சேர்ந்த 49 வயதுடைய ஹாசன் அல்சோகி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பிய பெண் ஒருவர் கடந்த 11ஆம் திகதி, பயிற்சிக்காக சென்றபோது, குறித்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டதாக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைய விசாரனையினை மேற்கொண்ட பொலிஸார், வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குற்றவாளி எதிர்வரும் மார்ச் மாதம் பிரம்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

#World

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....