21 61c2e439814c5
செய்திகள்இலங்கை

மூங்கிலாறு சிறுமி மரணம் – 5 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

Share

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த ஐந்து பேருக்கும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் 18ஆம் திகதி அவரது வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் பின்னணியில் சிறுமியின் தாய் ,தந்தை ,சகோதரி, சகோதரியின் கணவன் ,மைத்துனர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#LocalNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...