received 3346662718994367
செய்திகள்இலங்கை

விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிக்கு இராணுவத்தினர் இடையூறு – நிர்வாகத்தினர் கோரிக்கை

Share

முல்லைத்தீவு, விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக நேற்று (26.10.2025) ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் தொடங்கப்பட்டு, துயிலும் இல்லத்தின் முன்பகுதியில் வேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. துயிலும் இல்ல வளாகத்தின் ஒரு பகுதி இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், வேலி அமைக்கும் பணிகள் இராணுவ முகாமுக்கு அருகில் இடம்பெற்றபோது, அங்கு வந்த இராணுவத்தினர், அப்பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் எனத் தெரிவித்து இடையூறு அளித்துள்ளனர்.

இராணுவத்தின் இடையூறையும் மீறி, துயிலும் இல்ல நிர்வாகத்தினர் குறித்த பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ,ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்களையில் . இவ்வாண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற அனைத்து சிரமதானப் பணிகளும் ஏனைய ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்தப் பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது மிக நெருக்கடியான சூழ்நிலையிலேயே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும், எனவே, இந்த அரசாங்கமாவது மாவீரர் துயிலும் இல்ல காணியை முழுமையாக விடுவித்துத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...