பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் இணைந்து கற்கைநெறிகளை தொடர்வதற்கு 500 அழகுக்கலை நிபுணர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அழகுத் துறையில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
100 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியை உடைய அழகுத் துறையுடன் தொடர்புடைய நான்கு துறைகளில் பாடநெறிகளை கற்க இலங்கை அழகுக்கலை நிபுணர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற இப் பாடநெறியானது பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் நடத்தப்படும்.
இதன் விரிவுரைகளை சிங்கள மொழியில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment