26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

Share

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது, 2023-இல் தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்த்த அதே சட்டமூலத்தைப் போன்றே காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், 2023-இல் அன்றைய அரசாங்கம் கொண்டுவந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (ATA) எதிர்த்து, தற்போதைய அமைச்சர் விஜித ஹேரத் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இன்று அதே உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு சட்டத்தை NPP அரசாங்கம் முன்மொழிந்திருப்பது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜனநாயகத்தைப் பேசிய NPP, தற்போது பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்த வரைவை வெளியிட்டுள்ளது.

979-ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், தற்போதைய புதிய வரைவில் பல மோசமான மற்றும் கடுமையான பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.

இந்த வரைவைத் தயாரித்த நிபுணர் குழுவிலுள்ள பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள், இந்தச் சட்டம் கூடப் பயங்கரவாதத்தைத் தடுக்கப் போதாது எனக் கூறி முரண்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்ட வரைவின் உள்ளடக்கம் குறித்துத் தாம் முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும், அதன் பின்னர் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நீதியமைச்சுக்குக் கடிதம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...