செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

Share

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான போலி துருக்கிய கடவுச்சீட்டினை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஜே.கே. பாய், செவ்வந்தியை போல தோற்றமளிக்கும் தக்ஷி என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அழைத்து வந்து மற்றொரு போலி கடவுச்சீட்டினை தயாரித்ததாகவும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஷி என்ற பெண் இஷாரா செவ்வந்தியை போலவே இருந்ததால், அவர் நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு, தனது கடவுச்சீட்டினை பயன்படுத்தி மற்றொரு போலி கடவுச்சீட்டினை உருவாக்கி, துருக்கிக்குச் சென்று பின்னர் மலேசியாவுக்குச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தி ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாயுடன் நேபாளத்தில் ஒரே அறையில் சுமார் ஒரு மாதமாக தங்கியிருந்ததாகவும், பின்னர் அவர் வேறொரு அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு அறைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, நேபாளத்தின் காத்மாண்டுவில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி, ஜே.கே.பாய், யாழ்ப்பாண சுரேஷ், தக்ஷி, கம்பஹா பாபா மற்றும் நுகேகொட பபி ஆகியோர் செப்டெம்பர் 13 திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...