MediaFile 3 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் AI கட்டமைப்பிற்கு அமேசன், மைக்ரோசொப்ட் கூட்டாக 52.5 பில்லியன் டொலர் முதலீடு!

Share

தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களான அமேசன் (Amazon) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் கூட்டாக 52.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 4.35 இலட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

அமேசன் நிறுவனம் 2030-க்குள் இந்தியாவில் 35 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீடு AI சார்ந்த டிஜிட்டல் மயமாக்கல், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ள 35 பில்லியன் டொலர் முதலீடு, ஏற்கனவே இந்தியாவில் செய்யப்பட்ட 40 பில்லியன் டாலர் முதலீட்டின் தொடர்ச்சியாக அமையும். இதன் மூலம் இந்தியாவில் “மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக” தங்கள் நிறுவனம் உருவெடுக்கும் என்று அமேசன் தெரிவித்துள்ளது. முதலீட்டின் பெரும் பகுதி உள்ளூர் கிளவுட் (Cloud) மற்றும் AI உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படும்.

மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை வலுப்படுத்த 17.5 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இந்த முதலீடு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் முதலீட்டைத் தொடர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் AI மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு மையமாகத் திகழும் இந்தியா, சமீப காலமாக உலகளாவிய தொழில்நுட்ப முதலீடுகளில் பெரும் அதிகரிப்பைக் கண்டு வருகிறது:

கடந்த அக்டோபரில், கூகுள் நிறுவனம் AI தரவு மையத்தை அமைக்க 15 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்தது.

இந்த வாரத் தொடக்கத்தில், மும்பையைச் சேர்ந்த டாடா எலெக்ட்ரானிக்ஸின் 14 பில்லியன் டொலர் செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டத்தில் தனது முதல் முக்கிய வாடிக்கையாளராக இணைவதாக இன்டெல் அறிவித்தது

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...