25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

Share

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் அவர்கள், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, குறித்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தலைமை தேரர் அந்தக் கடிதத்தில், திருகோணமலை விவகாரத்தின் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விஹாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் விஹாரை அமைந்துள்ள காணியின் உரிமை அப்போதைய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மானியப்பத்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், திருகோணமலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 16) இடம்பெற்ற புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என அமரபுர மகாநிக்காயவின் தலைமை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு தலைமை தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...