17 3
செய்திகள்

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்

Share

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இவ்வாறான போலி தகவல் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் பின்னணியில் இந்த 5000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உருவப்படமும் அவரது கையொப்பமும் இடப்பட்ட புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த நாணயத்தாளானது போலியானது எனவும் இது எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க(Ravi Karunanayaka) செயற்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன்(Arjun Mahendran) கடமையாற்றி இருந்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்தில் இதுவரையில் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...