1737305325 school closed
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மூடல்: ஆளுநர் அதிரடி உத்தரவு!

Share

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு இடையே இன்று (18) அதிகாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (டிசம்பர் 19) முதல் பாடசாலைகள் மூடப்படும். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபனி பியசேன இது குறித்துத் தெரிவிக்கையில், “கிறிஸ்துமஸ் விடுமுறையைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...