1737305325 school closed
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மூடல்: ஆளுநர் அதிரடி உத்தரவு!

Share

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு இடையே இன்று (18) அதிகாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (டிசம்பர் 19) முதல் பாடசாலைகள் மூடப்படும். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபனி பியசேன இது குறித்துத் தெரிவிக்கையில், “கிறிஸ்துமஸ் விடுமுறையைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...