பாடசாலை மாணவர்களிடையே சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பாக 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர். இளம் வயதிலேயே புகைப்பழக்கத்திற்கு ஆளாகும் இந்த நிலை கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இளம் வயதில் இந்தப் பழக்கத்திற்கு ஆளாவதால் ஏற்படும் முக்கிய சுகாதார அபாயம் குறித்தும் அவர் எச்சரித்தார்.
இந்தப் பழக்கம் எதிர்காலத்தில் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மற்றும் கடுமையான நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.