ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

wor

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் நேற்று திங்கட்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த இந்த விமானம், சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் உள்ள கர்மதந்த் கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்து நொருங்கியது.

இந்த விமானத்தில் நோயாளி, மருத்துவர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் என மொத்தம் 7 பேர் பயணித்தனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 6 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால், மீட்புப் படையினரும் உள்ளூர் மக்களும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலையா என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version