Estate
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானது: பெப். 10 முதல் அமல்!

Share

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக உயர்த்துவதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று (30) முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்கு இடையில் இந்தச் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிகரிக்கப்பட்ட புதிய சம்பளம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப்பெறும் என்று பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள அதேவேளை, சில முக்கிய குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய தனியார் துறையினர் எவ்வித ஊதிய அதிகரிப்புமின்றி ஏமாற்றப்படுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், அரசாங்கத்தினால் ஏனைய மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஏனைய சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் பெருந்தோட்ட மக்களுக்குச் சென்றடைவதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பள உயர்வு எட்டப்பட்டுள்ள நிலையில், அது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...