இலங்கை அரசாங்கத்திற்குக் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து அரசு திருப்பிப் பெறத் திட்டமிட்டுள்ளது.
தாய் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாய்லாந்து அரசு இது தொடர்பாக அக்டோபர் 28 ஆம் திகதி இலங்கை அரசுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் இந்த இரண்டு யானைகளையும் மோசமாகப் பராமரித்து வருவதாகக் கூறப்படுவதால், தாய்லாந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தாய்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்ட ‘முத்துராஜா’ (பிளே சக் சுரின்) என்ற யானையைத் திரும்பப் பெறுவதற்குப் பின்பற்றப்பட்ட அதே செயல்முறையே இந்த இரண்டு யானைகளையும் திருப்பிப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பப் பெறப்படவுள்ள இரண்டு யானைகளும் பிளே பிரது பா மற்றும் பிளே ஸ்ரீனாரோங் என்று அழைக்கப்படுகின்றன.
வரலாற்று முக்கியத்துவம்: இந்த யானைகளில் ஒன்று (பிளே பிரது பா), 1979 ஆம் ஆண்டு 12 வயதில் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட முதல் யானைக் குட்டி என்றும் தெரிவிக்கப்படுகிறது.