al
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை !

Share

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (06) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை பின்வரும் செயற்பாடுகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகளுக்காக நடத்தப்படும் தனியார் மேலதிக வகுப்புகள் (Tuition Classes).

பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள். மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல். பரீட்சை வினாக்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல்.

எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை.

நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

 

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...