dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

Share

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகன வரிசை மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2019-ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். அவர்களின் தேசபக்தி, உறுதிப்பாடு மற்றும் தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றென்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியரும் அவர்களின் துணிச்சலைக் கண்டு உத்வேகம் பெறுகின்றனர்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலிகள். அவர்களின் தியாகத்திற்கு தேசம் என்றும் கடமைப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பயங்கரவாதத்திற்கு எதிராக மோடி அரசு ‘ஜீரோ டாலரன்ஸ்’ (Zero Tolerance) கொள்கையுடன் செயல்படுவதாகவும், வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்றும் அமித்ஷா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவின் லெத்போரா பகுதியில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப் நினைவிடத்தில் இன்று காலை சிறப்பு அஞ்சலி மற்றும் மலர்வளையம் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் இதில் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். சமூக வலைதளங்களில் பலரும் #PulwamaAttack மற்றும் #BlackDay ஆகிய ஹேஷ்டேக்குகளின் கீழ் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...