24 66ac07c4e08b5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: வீதியால் சென்ற முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (67 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிலிருந்து அத்தியாவசியத் தேவை நிமித்தம் வெளியில் சென்ற இவர், ஆறுகால்மடம் மடத்தடிப் பகுதியில் வீதியோரமாகச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி வீழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மீட்கப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...