24 66ac07c4e08b5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: வீதியால் சென்ற முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (67 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிலிருந்து அத்தியாவசியத் தேவை நிமித்தம் வெளியில் சென்ற இவர், ஆறுகால்மடம் மடத்தடிப் பகுதியில் வீதியோரமாகச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி வீழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மீட்கப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...