இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 549 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது மொத்தம் 29,608 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 26 பேர், நீதிமன்றத்தினால் பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பிலும் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய 309 சாரதிகள், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,392 பேர் ,கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைக் குறைக்கவும் இத்தகைய சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

