MediaFile 2 8
செய்திகள்இலங்கை

முகமாலையில் ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி!

Share

யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ‘யாழ் தேவி’ ரயிலுடன், ரயில் வழித்தடத்திலுள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...