images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

Share

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆணமடுவ, சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவன்.

நேற்று (29) இச்சிறுவனின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவனை பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார். பாட்டியின் வீட்டிலிருந்து மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போதே, மழையினால் நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் சிறுவன் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துள்ளார்.

சிறுவன் நீண்ட நேரமாகியும் வராததால் தேடியபோது, குழிக்குள் மூழ்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

இன்று (30) மேற்கொள்ளப்பட்ட மரணப் பரிசோதனையில், சிறுவன் நீரில் மூழ்கியமையாலேயே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மழைக்காலம் என்பதால் பள்ளங்கள் மற்றும் குழிகளில் நீர் நிறைந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது சிறு பிள்ளைகள் தொடர்பில் மேலதிக அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு காவல்துறையினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....