images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

Share

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆணமடுவ, சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவன்.

நேற்று (29) இச்சிறுவனின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவனை பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார். பாட்டியின் வீட்டிலிருந்து மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போதே, மழையினால் நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் சிறுவன் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துள்ளார்.

சிறுவன் நீண்ட நேரமாகியும் வராததால் தேடியபோது, குழிக்குள் மூழ்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

இன்று (30) மேற்கொள்ளப்பட்ட மரணப் பரிசோதனையில், சிறுவன் நீரில் மூழ்கியமையாலேயே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மழைக்காலம் என்பதால் பள்ளங்கள் மற்றும் குழிகளில் நீர் நிறைந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது சிறு பிள்ளைகள் தொடர்பில் மேலதிக அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு காவல்துறையினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...

26 5
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலி: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் பிரிபொங் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர் (Kerzers) நகரில் நேற்று (10) மாலை இடம்பெற்ற...