25 6933bb9be63c1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளியின் கோரத்தாண்டவம்: மத்திய மலைநாட்டின் 34% வனப்பகுதிகள் அழிவு!

Share

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டிட்வா’ (Didwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவுகளால், நாட்டின் மத்திய மலைநாட்டு இயற்கை வனப்பகுதிகளில் 34 சதவீதம் பாரிய சேதங்களைச் சந்தித்துள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழு தனது பூர்வாங்க அறிக்கையைச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திகவிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி மத்திய மலைநாட்டின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மண்சரிவுகளால் சிதைக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, இப்பகுதியிலுள்ள 34 வீதமான காடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிவடைந்துள்ளன.

இலங்கையின் பிரதான ஏழு நதிப் படுக்கைகளின் (River Basins) சுற்றுச்சூழல் சமநிலை இந்த அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலைநாடு மட்டுமன்றி, நாட்டின் கடலோரச் சூழல் மற்றும் களப்புப் (Lagoons) பகுதிகளும் இந்தச் சூறாவளியினால் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திக இது குறித்துக் கூறுகையில், நாட்டின் இதயமாக விளங்கும் மத்திய மலைநாட்டின் வனப்பரப்பு இவ்வளவு பெரிய அளவில் சேதமடைந்திருப்பது பாரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாகும் என்றும், இதனைச் சீரமைக்க நீண்டகாலத் திட்டங்கள் அவசியமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...