25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

Share

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த இளைஞர் ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோப்பாய் பிரதேசத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கும்போது, அந்தத் தகவல்கள் சந்தேக நபர்களுக்குத் தெரிவிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனால், பொதுமக்கள் காவல்துறையினரை அணுக அச்சப்படும் சூழல் நிலவுவதாகவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே தகவல்களை வழங்குவது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் காவல்துறையினருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் கோப்பாய் பிரதேச அமைப்பாளர் விவேக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....

MediaFile 1
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் உடன் அமுலுக்கு!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும்...