gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

Share

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன், 57 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் பாரிய குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயதுச் சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இலக்கைத் தவறவிட்டு சிறுமியை சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையில் இளம் பெண் வசிக்கும் வீட்டுக்கு அருகில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் இருப்பதும் அவர் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர் குற்றக் கும்பல் குழுவொன்றின் உறுப்பினராவார்.

இதற்கிடையில் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி நேற்றையதினம் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் திலீப் சதுரங்க எனப்படும் ரஜவத்த சத்துவா என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

Share
தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...