19 8
இந்தியாசெய்திகள்

தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

Share

தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கைதான கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகளை விடுவிக்கவும், அவர்களை மீட்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 35 கடற்றொழிலாளர்கள் 4 நாட்டுப் படகுகளுடன் வியாழக்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் ஜெய்சங்கரிடம் இருந்து இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை.

இதற்குள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த 35 பேரும், ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு வாரியபொல சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஜெய்சங்கருக்கு நேற்று ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் இரண்டு தமிழக கடற்றொழிலாளர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்

எனினும் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கப்படாமை வருத்தமளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கு மத்தியில் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதற்கும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கு வலுவான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...