4 46
செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுரவின் கூட்டம்

Share

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுரவின் கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள் சீருடையில் கலந்துகொண்டமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தினால் வழங்கப்படும் சீருடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நிறுவனங்களின் சட்டவிதிகளையும் தேர்தல் சட்டத்தையும் மீறும் செயலாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல் என, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...