8 21
இந்தியாசெய்திகள்

அம்பானியை திட்டிவிட்டு அவர் வீட்டு திருமணத்திற்கு சென்ற உதயநிதி.., அண்ணாமலை விமர்சனம்

Share

அம்பானியை திட்டிவிட்டு அவர் வீட்டு திருமணத்திற்கு சென்ற உதயநிதி.., அண்ணாமலை விமர்சனம்

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற நிலையில் அவரை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை வந்தனர்.

தமிழ் பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பம், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அட்லீ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், இந்த திருமணத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். அம்பானி குடும்பத்தின் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “இத்தனை காலம் அம்பானியையும், அதானியையும் திமுகவினர் எப்படியெல்லாம் திட்டினார்கள். அவர்களை பற்றி தவறாக பேசி அரசியல் செய்தார்கள்.

ஆனால், இன்று அம்பானி வீட்டு திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ஸ்டாலினின் மருமகன், அதானியுடன் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே வாரத்தில் நடக்கிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...