24 661cad86a88c2
இந்தியாசெய்திகள்

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார்

Share

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார்

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் நல்ல திட்டங்களை செயல்படுத்தவில்லை. அதற்கு பதிலாக பாஜகவை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி ஆகியவற்றை மக்களுக்கு வழங்கிவிட்டு திமுக அநாகரிகமாக பேசி வருகிறது.

உலகமே பாராட்டும் தலைவராக இருக்கும் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் மோடியின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை.

காங்கிரஸ், திமுக கட்சிகள் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. மத்திய அரசு வழங்கும் நிதியை வைத்தும் திமுக ஆக்கப்பூர்வமான திட்டத்தை செயல்படுத்தவில்லை. மீண்டும் மோடி பதவியேற்க அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...