IMG 20220217 WA0018
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆளும் தரப்பினரால் கெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்!! – ஜெபநேசன் கவலை!!

Share

ஆளும் தரப்பிலுள்ள இரு மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயுள்ள போட்டித்தன்மை காரணமாக அபிவிருத்தித்திட்டங்கள் தடை ஏற்படுத்தப்படுவதுடன் உள்ளூராட்சி மன்றங்களினால் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படமுடியாத நிலையும் காணப்படுவதாக வலிதென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபநேசன் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களுக்குட்பட்டு எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து வருகின்றோம்.

அவ்வாறான திட்டங்கள் செய்து வருகின்றபோது இன்றைய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையில் போட்டி நிலை காரணமாக பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

குறிப்பாக புங்குடுதீவில் அமைக்கப்படவுள்ள ஆர்ஓ திட்டத்தை கல்லுண்டாய் வெளிக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது தற்சமயம் புங்குடுதீவுக்கே அமைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

குறித்த விடயத்தில் புங்குடுதீவுக்கே அது வழங்குவதற்கான திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனை கல்லுண்டாய் வெளிக்கு மாற்ற கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனால் அந்தத் திட்டத்தை எங்கு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக குழப்ப நிலை காணப்பட்டு இறுதியாக புங்குடுதீவிற்கே வழங்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இது தேவையற்ற குழப்பமாகவே தோன்றியது. இருவருக்குமிடையில் உள்ள போட்டி தன்னமயாலே இது உருவானது.

இவை தொடர்பில் உரிய இடங்களுக்கு நாங்கள் முறையிட்டுள்ளோம். இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சிறிது காலம் பார்த்துவிட்டு ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றோம் என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள கொழும்பு மாநகர சபையின் தவிசாளர் றோசி சேனநாயக்க தலைமையிலான குழுவினர் எமது பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளனர்.

எங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக பார்வையிடவுள்ளதுடன் எத்தகைய திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம் எனத் தெரிவித்தார்கள்.

குறித்த சந்திப்பில் தவிசாளருடன் உறுப்பினர்களான ரமணன் மற்றும் ஜிப்ரிக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...