21 61bc3f8ee6fba
செய்திகள்உலகம்

கனடாவில் துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்!!

Share

கனடா- ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத ஆரம்பத்தில் 37 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸ் வேடத்தில் வந்த மூன்றுபேரே இவ்வாறு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை காணாமல்போன பெண் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர் மீது முன்னரே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் திகதி கிங் வில்லியம் கிரசண்டில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் வெளியே வாகன நிறுத்துமிடத்தில் இருவர் அவரை தாக்கியதாகவும், வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே தள்ள முயன்றதாகவும், இதனால் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனவரி 12 ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வசாகா கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து மூன்று பேர் கொண்ட கும்பலால் குறித்த பெண் கடத்தி செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...