21 61bc3f8ee6fba
செய்திகள்உலகம்

கனடாவில் துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்!!

Share

கனடா- ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத ஆரம்பத்தில் 37 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸ் வேடத்தில் வந்த மூன்றுபேரே இவ்வாறு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை காணாமல்போன பெண் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர் மீது முன்னரே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் திகதி கிங் வில்லியம் கிரசண்டில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் வெளியே வாகன நிறுத்துமிடத்தில் இருவர் அவரை தாக்கியதாகவும், வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே தள்ள முயன்றதாகவும், இதனால் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனவரி 12 ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வசாகா கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து மூன்று பேர் கொண்ட கும்பலால் குறித்த பெண் கடத்தி செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....