canada usa
செய்திகள்உலகம்

கனடா – அமெரிக்கா எல்லையில் திடீர் பதற்றம்!!

Share

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற அறிவிப்புக்கு எதிராக வாகன சாரதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்குத், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்று அரசின் அறிவிப்பிற்கெதிராக கனடாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கனரக வாகன சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என தங்களை அழைத்துக்கொள்ளும் அவர்களுக்கு, அண்மைய நாட்களாகவே ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், இவ்வார இறுதியில் கனேடியத் தலைநகர் ஒட்டாவாவின் மத்திய பகுதியில் போராட்டம் நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளன்னர்.

அமெரிக்கா – கனடா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து கனரக வாகன சாரதிகள் கட்டாயம் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற நடைமுறையினை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இருநாடுகளுமே நடைமுறைப்படுத்தியிருந்தன.

இருநாட்டு அரசின் அறிவிப்பிற்கெதிராக முன்னெடுக்கவுள்ள வாரயிறுதிப் போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் இதுவரை வெளியாவில்லை.

இப்போராட்டமானது மிகப்பெரிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்துமென அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இதுவரையில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...