https hypebeast.com image 2022 01 space x wins 100m usd contract to develop rocket deliveries anywhere earth 00
செய்திகள்உலகம்

நிலவுடன் மோதும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!

Share

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட்டை ஏவியிருந்தது.

அந்த ராக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் வழியிலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் நிலவில் மோத இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி அளவில் நிலவின் மீது குறித்த ராக்கெட் மோதி வெடிக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேராசிரியர் மாக்டெவல் கூறும்போது,

பல சகாப்த காலங்களில் கிட்டத்தட்ட 50 பெரிய விண்வெளி பொருட்கள் கண்காணிக்க முடியாமல் போயுள்ளது. தற்போது பால்கன் ராக்கெட் நிலவில் மோதுவது உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம்.

நிலவின் மீது முதல் ராக்கெட் சிறிய பள்ளத்தை ஏற்படும் தற்போது விண்வெளியில் சுற்றி திரியும் குப்பைகள் அரிதாகவே மோதி வருகின்றன.

இதனால் இப்போது எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கலாம் .அதனால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றார்.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...