121824245 pa 53560653
செய்திகள்உலகம்

இரு மடங்காகும் கொரோனா!!

Share

தென் ஆபிரிக்காவில்  கொரோனா  தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் உருமாறிய  கொரோனா  வைரஸான ஒமைரோன் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

ஒமைரோன் வைரஸ் ஏற்கெனவே  கொரோனா  பாதிப்பில் இருந்து மீண்டவர்களை எளிதில்தாக்கும் என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்  கொரோனா  தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு  கொரோனா  பாதிப்பு 4,373 என்று இருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 8,561 ஆக அதிகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மண்டல மருத்துவ நிபுணர் நிக்ஸி குமேட்-மொலெட்ஸி தெரிவிக்கையில்,  தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாத ஆரம்பத்தில் 7 நாள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 என்ற அளவில் இருந்த  கொரோனா  பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. ‘வரும் காலங்களில் ஒமைரோன் பாதிப்பு இரண்டு அல்லது மும்மடங்காக இருப்பதைப் பார்க்கப் போகிறோம் என்று எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் ஏற்கெனவே 90,000 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...