download 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் 1947 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன: ஆயுதக் கடத்தலுக்கு இராணுவ முகாம் தொடர்பை அமைச்சர் உறுதிப்படுத்தினார்!

Share

இலங்கையில் திட்டமிட்ட குற்றக்குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், இந்த ஆண்டில் இதுவரையில் 1947 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (அக்டோபர் 23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆயுதக் கடத்தல் மற்றும் தொடரும் அச்சுறுத்தல்:

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றக்குழு வலையமைப்புகளின் முக்கிய அங்கமாக ஆயுதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குற்றக்குழுக்களிடம் இன்னும் ஆயுதங்கள் இருப்பதால், நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் கூறினார்.

மேலும், முன்னதாக இராணுவ முகாமொன்றிலிருந்து ரீ-56 ரகத்தைச் சேர்ந்த 78 துப்பாக்கிகள் திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதில், அதிகாரிகள் இதுவரை 36 துப்பாக்கிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் திட்டமிட்ட குற்றக்குழு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை அரசாங்கம் வேரறுக்கும் எனவும், இந்த நோக்கத்திற்காக, முறையான திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...