images 4 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

Share

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் இணைந்து நேற்று (18) மாலை மயிலங்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளனர்.

நண்பர்கள் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு மாணவன் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். ஏனைய நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஆவார். இவர் இந்த ஆண்டு உயர்தர (A/L) வகுப்பில் கல்வி பயின்று வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாமடுப் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தைத் தொடர்ந்து குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அதிக நீர்மட்டத்தைக் கொண்டுள்ளதால், ஆழம் தெரியாத பகுதிகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...