MediaFile 5
செய்திகள்இந்தியா

ஐதராபாத் அருகே கோர விபத்து: அரசுப் பேருந்து மீது லொறி மோதியதில் 17 பேர் பலி – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

Share

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு அரசுப் பேருந்தின் மீது லொறி ஒன்று மோதியதில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாகச் சேதமடைந்தது. விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரம், நேற்று (நவம்பர் 02) ராஜஸ்தான் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...