தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

25 691abc1d14e03

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகள், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ வைத்த தாயார் சிகிச்சைப் பலனின்றி நேற்று (நவம்பர் 17) உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 4ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், சிறுமி தனது தாயின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

உயிரிழந்த பெண், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயதுடைய துலாஞ்சலி குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் எகொடவெலவைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி எனத் தெரியவந்துள்ளது.

Exit mobile version