images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Share

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் (Kenya Civil Aviation Authority) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

சுற்றுலாத் தலமான டயானியிலிருந்து, மாசாய் மாரா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள கிச்வா டெம்போ (Kichwa Tembo) என்ற தனியார் விமான ஓடுபாதைக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:30 மணியளவில் (0230 GMT) விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணத்தை நிறுவ, அரசு நிறுவனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மேலதிக விவரங்களைத் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் விமானப் போக்குவரத்து ஆணையகம் கூறியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம், மருத்துவ அரசு சாரா நிறுவனமான அம்ரெஃப் (AMREF)-க்கு சொந்தமான ஒரு இலகுரக விமானம் தலைநகர் நைரோபியின் புறநகரில் விபத்துக்குள்ளானது. அந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 6956109675232
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர வெடிவிபத்து: பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் (Bar) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கிப்...

WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில்...

MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப்...

feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...